புதுடெல்லி:

தார் எண்ணுடன் பான் கார்டை மார்ச் 31-ஆம் தேதிக்குள் இணைக்கவில்லை என்றால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஒருவரே பல பான் கார்டுகளை வைத்துக்கொண்டு மோசடியில் ஈடுபடுவதாகவும், வருமான வரி ஏய்ப்பு, வரி ஏய்ப்பு, கடன் ஏய்ப்பு உள்ளிட்ட செயல்களில் ஈடுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று மத்திய அரசு கடந்த 2017ம் ஆண்டு சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டப்படி பான் எண்ணுடன் ஆதாரை இணைக்காவிட்டால் அவர்களின் பான் கார்டு செயல்பாட்டில் இருக்காது, அதாவது பயனற்றதாகவிடும் என எச்சரித்து இருந்தது.

இந்த இணைப்பிற்காக ஏற்கெனவே பலமுறை அரசு காலக்கெடு அளித்தது. ஆனாலும், சரியான விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் மக்கள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கப் பலரும் கால தாமதம் செய்து வந்தனர். இந்நிலையில், மார்ச் 31 ஆம் தேதிதான் இறுதி நாள் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இம்முறையும் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளதாகச் செய்திகள் வெளியாகி இருக்கிறது.