சண்டிகார்:

இந்தியாவை தோற்கடிக்க அணு ஆயுதங்களைப் பயன்படுத்தவும் பாகிஸ்தான் தயங்காது என பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் எச்சரித்துள்ளார்.


பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ராணுவத்தில் கேப்டனாகவும் பணியாற்றியிருக்கிறார்.

பாலக்கோடு தாக்குதலில் இறந்தோர் எண்ணிக்கையை வெளியிட மறுப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், ” தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டாலோ அல்லது நூறு பேர் கொல்லப்பட்டாலோ, தகவல் துல்லியமாகவும் சத்தமாகவும் சொல்லப்பட வேண்டும்” என்றார்.

இந்த விசயத்தில் இந்தியா தயங்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறிய அமரீந்தர் சிங், “அப்பாவி வீரர்களையோ அல்லது மக்களையோ நாம் கொல்லவில்லை. தீவிரவாதிகளைத் தான் கொன்று இருக்கின்றோம். தண்டிக்கப்படுவோமோ என்ற அச்சம் தேவையில்லை” என்றார்.

மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த அவர்,” இரு நாடுகளுக்கும் அணு ஆயுதம் இருப்பதால், அணு ஆயுதத்தை பயன்படுத்த விரும்பமாட்டார்கள். எனினும் போரில் தோற்போம் என்று தெரிந்தால், அணு ஆயுதத்தையும் பயன்படுத்த பாகிஸ்தான் தயங்காது” என்றார்.