இஸ்லாமாபாத்: ஊழல் வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீப் இருந்த போது, சொகுசு வாகனங்கள் வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான விசாரணையில், நவாஸ் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டது.

அவருக்கு சிறை தண்டனையும் விதிக்கப்பட கோட்லாக்பாத் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் ஷெரீப்புக்கு கடந்தாண்டு, அக்டோபர் 22ம் தேதி  திடீரென நெஞ்சு வலி ஏற்பட  ஜாமீனில் வெளிவந்து லண்டனில் தங்கி சிகிச்சை பெற்றார்.

ஜாமீன் காலம் முடிவடைந்த நிலையில், அவர் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் கெடு விதித்தது. ஆனால், நவாஸ் நாடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை தேடப்படும் குற்றவாளியாக பாகிஸ்தான் அறிவித்தது.

இந்நிலையில், நவாஷ் ஷெரீப்புக்கு பாகிஸ்தான் அரசு, கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்த தகவல்களை அந்நாட்டு ஊடகங்கள்  வெளியிட்டு உள்ளன.