கராச்சி: தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்காவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான்.

இதன்மூலம், நியூசிலாந்தில் கிடைத்த மோசமான டெஸ்ட் தோல்விக்குப் பிறகு, இந்த வெற்றி பாகிஸ்தான் அணிக்கு ஒரு பெரிய ஊக்கமாக அமைந்துள்ளது.

தென்னாப்பிரிக்க அணி, முதல் இன்னிங்ஸில் 220 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 245 ரன்களும் அடித்தது. பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸில் 378 ரன்களைச் சேர்த்தது.

எனவே, நான்காம் நாளான இன்று 88 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி, களமிறங்கிய அந்த அணி, 3 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்களைச் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இதன்மூலம், மொத்தம் 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில், 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது பாகிஸ்தான் அணி.