கோவா

பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி இந்தியாவில் உள்ள கோவாவுக்கு வந்துள்ளார்.

கராச்சியில் இருந்து கோவாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தனி விமானம் மூலம் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி கோவாவின் டபோலிமில் உள்ள விமான தளத்தில் வந்து இறங்கினார்

இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு லாகூர், ரஷியா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இன்றும் நாளையும் இந்த அமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர் கூட்டம் கோவாவில் நடைபெறவுள்ளது.

மாநாட்டில் பங்கேற்பதற்காக 12 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் அமைச்சர் இந்தியா வந்துள்ளார்.   கடந்த 2011-ஆம் ஆண்டு ஜூலை மாதம் அமைதி பேச்சுவார்த்தை நடத்த, அப்போதைய பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரபானி இதற்கு முன்பு இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார்.

அதற்குப் பிறகு பாகிஸ்தானில் இருந்து அரசு சார்பாக யாரும் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.