இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் குவெட்டாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று அதிகரித்து வருவதை  கருத்தில் கொண்டு பலுசிஸ்தான் மாகாண அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் குவெட்டாவில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஒன்று கூடுவதற்கு தடை விதித்துள்ளது.

ஊதிய விவகாரம் தொடர்பாக ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த மாதம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாபராபாத் நகரில் சம்பள உயர்வு கோரி ஏராளமான ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியிருந்தனர்.

தேர்தல் பணிகள் உள்பட அனைத்து அரசு வேலைகளும் புறக்கணிப்பதாகவும், கோரிக்கைகளை நிறைவேற்றுமாறும் அரசை ஆசிரியர்கள் சங்க நிர்வாகம் வலியுறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.