டில்லி

டும் எதிர்ப்புக்கு இடையே பத்மாவத் இந்தித் திரைப்படம் வரும் 26ஆம் தேதி வெளியாக உள்ளது.

பத்மாவத் இந்தித் திரைப்படம் சர்ச்சைக்கு மேல் சர்ச்சையில் சிக்கி தற்போது வெளியிட தயாராக உள்ளது.   இந்தப் படத்துக்கு அளிக்கப்பட்ட தணிக்கை சான்றிதழை ரத்து செய்யக் கோரிய மனு உச்ச நீதிமன்றத்தில் நிராகரிக்கப் பட்டுள்ளது.   அதை ஒட்டி வரும் ஜனவரி 26ஆம் தேதி இந்த திரைப்படம் வெளிவரும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

தீபேந்திர பதக்

தலை நகர்  டில்லியில் இந்தத் திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.  இது குறித்து டில்லி காவல்துறை செய்தி தொடர்பாளர் தீபேந்திர பதக், “அனைத்து திரை அரங்குகளிலும் பலதத பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.  நாங்கள் திரையரங்கு உரிமையாளர்களுடனும்,  அங்கு வசிக்கும் மக்கலுடனும் அடிக்கடி தொடர்பில் உள்ளோம்.   எந்த ஒரு தொல்லையும் இன்றி படம் வெளியாகும் என நம்புகிறோம்”  என்று தெரிவித்துள்ளார்.