டெல்லி

ன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பி ஆர் கவாய் பதவியேற்றுள்ளார்.

இன்று உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் பதவியேற்றுக் கொண்டார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பி.ஆர்.கவாய்க்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதுவரை தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கண்ணா நேற்றுடன் ஓய்வு பெற்ற நிலையில் கவாய் பதவியேற்றுள்ளார்.

கவாய் நவம்பர் 23-ம் தேதி ஓய்வுபெறும் வரை 6 மாதங்கள் பதவி வகிக்க உள்ளார்  இந்த விழாவில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள், சபாநாயகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மகாராஷ்டிர மாநிலம் அம்ராவதியைச் சேர்ந்த பி.ஆர்.கவாய், 1960-ல் பிறந்து கடந்த 1985ல் வழக்கறிஞர் சங்கத்தில் இணைந்து, மும்பை உயர்நீதிமன்றத்தில் பயிற்சி பெற்றார்.   அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நிர்வாகச் சட்டம் தொடர்பான வழக்குகளில் முக்கிய பங்காற்றி1992ம் ஆண்டு அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.

கடந்த, 2003ல் மும்பை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகவும், 2005ல் நிரந்தர நீதிபதியாகவும் ஆனார்.  2019-ம் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியான கவாய், அடுத்த சில ஆண்டுகளில் தலைமை நீதிபதி ஆகியுள்ளார்.

முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு பின், தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து தலைமை நீதிபதியாகும் இரண்டாவது நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.