டில்லி:

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் புல்லட் ரெயில் திட்டத்தை கடுமையாக விமர்சனம் செய்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவரது பதிவில், ‘‘புல்லட் ரெயில் திட்டம் பணமதிப்பிழப்பு அறிவிப்பை போன்றது. மக்கள், பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தையும் அழித்து விடும். பணத்தை செலவிடுவதற்கு பதில் ரெயில்வேயில் ம க்கள் பாதுகாப்பை அதிகப்படுத்தல வேண்டும்.

புல்லட் ரெயில் திட்டம் சாமானிய மக்களுக்கானது கிடையாது. வசதி படைத்தவர்கள் மற்றும் வலிமையானர்களுக்காக உருவாக்கப்படும் ஈகோ பயணம். ரெயில்வே அமைச்சர் ஒருநாள் முன்பு தான் ரூ.1 லட்சம் கோடியில் ரெயில் பாதுகாப்பு, ரயில்வே பாதை மேம்பாடு, சிக்னல் சீரமைப்பு என வாக்குறுதி அளித்தார். ஆனால் மறுநாளே மும்பை ரெயில்நிலையத்தில் விபத்து நடந்துள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.