சென்னை:

மிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து உள்ள நிலையில்,   சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் சென்னை ராயபுரம் மண்டலம் முதலிடத்தில் உள்ளது. இங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிங்ககை 7881 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் நேற்று ஒரே நாளில் 2167 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 55,969 ஆக உயர்ந்தது, இதுவரை 33,441 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். மேலும், 21,681 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் இதுவரை 846 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில்  சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. அதன்படி, அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 7,881பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ராயபுரத்தில் அதிகமானோருக்கு தொற்று உறுதி யானாலும் அங்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 2,212 ஆக உள்ளது.
அண்ணாநகரில் மொத்த பாதிப்பு 6,033 ஆக அதிகரித்துள்ளது.  மேலும் தண்டையார்பேட்டை -6,539 பேர், தேனாம்பேட்டை- 6,095பேர், கோடம்பாக்கம்- 5,827 பேர்,  திருவிக நகர்- 4,666 பேர், வளசரவாக்கம்- 2,611பேர், திருவொற்றியூர்-2,520 பேர், அம்பத்தூர் -2324 பேர், அடையாறு – 3,445 பேர், மாதவரம்- 1,819பேர், பெருங்குடி-1,290 பேர், சோழிங்கநல்லூர்- 1,634பேர், ஆலந்தூர்-1,431 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.