சிம்லா

னமழை காரணமாக இமாசலப் பிரதேசத்தில் 9 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

 

கடந்த சில நாட்களாக இமாசல பிரதேசத்தில் பருவமழை பொழிவால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. பல சாலைகள் முற்றிலும் அழிந்து விட்டன. மக்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் நீர்ப்பாசனத்திற்குத் தேவையான தண்ணீர் விநியோகம் ஆகியவை பாதிக்கப்பட்டு உள்ளது.

அம்மாநில வருவாய்த் துறை அமைச்சர் ஜெகத் சிங் நேகி,

”மாநிலத்தில் ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. தவிர188 பேர் உயிரிழது 194 பேர் காயமடைந்து 652 வீடுகள் சேதமடைந்து உள்ளன. தவிர, 6500 வீடுகள் பகுதியளவு பாதிக்கப்பட்டு உள்ளன”

எனக் கூறியுள்ளார்.

இந்திய வானிலை ஆய்வு மையம் தலைவர் சுரேந்தர் பால், சிம்லா, சோலன், சிர்மவுர், மண்டி, பிலாஸ்பூர், காங்ரா, சம்பா, ஹமீர்பூர் மற்றும் உனா ஆகிய 9 மாவட்டங்களுக்கு அடுத்த 3 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதாகஅறிவித்ஹ்டுள்ளார்

மேலும் அவர்.

”இங்கு தொடர்ந்து மழைப்பொழிவு இருக்கும். நடப்பு ஆண்டில் கடந்த 100 ஆண்டு பதிவுகளைப் பார்க்கும்போது, அதிக மழைப்பொழிவு உள்ளது”

எனவும் கூறியுள்ளார்.