ட்டி

ன்று முதல் மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கி உள்ளது.

கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மலைரெயில் பாதையில் கல்லாறு-ஹில்குரோவ் இடையே 5க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டதால் மலை ரயில் சேவை உடனடியாக நிறுத்தப்பட்டது.

ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் கிடந்த மரங்கள் மற்றும் மண்சரிவினை அகற்றிச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையொட்டி ரயில் சேவை தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த ரயில் பாதை சீரமைக்கும் பணி முழுவதும் முடிந்த பின்னர் மலை ரயில் சேவை தொடங்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.

தொடர் மழையால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையிலான மலை ரயில் போக்குவரத்து 4 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் தொடங்கியுள்ளது.