கோவை

ன்றும் நாளையும் மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. 

மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகமண்டலம் வரை நீலகிரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.  மலைகள் மற்றும் இயற்கைக் காட்சிகளைக் கண்டு ரசிக்க இந்த மலை ரயில் மிகவும் உகந்தது ஆகும்.

எனவே இந்த மலை ரயிலில் பயணம் செய்து அங்குள்ள இயற்கை சூழலைக் கண்டு ரசிக்கச் சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நேற்று, கனமழை காரணமாக கல்லார் முதல் அடர்லி வரை மலைப்பாதையில் நேற்று மரங்கள் விழுந்து மண்சரிவு ஏற்பட்டது. நேற்று முதல் தண்டவாள பாதையில் ஏற்பட்ட மண்சரிவை அகற்றும் பணிகள் நடைபெற்று வந்தன.

நீலகிரீல் பெய்து வரும் மழை காரணமாகச் சீரமைப்பு பணிகள் தாமதமாவதால், மேட்டுப்பாளையம்- உதகை மலை ரயில் சேவை இன்றும், நாளையும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.