பாட்னா: பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் சிறுநீரகம் 75 சதவீதம் செயலிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர்.

ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் நிறுவனரும், பீகார் முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத், 2017ம் ஆண்டு மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந் நிலையில், சிறுநீரகப் பாதிப்பு காரணமாக பல மாதங்களாக ராஞ்சியிலுள்ள மருத்துவமனையில் லாலுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவரது சிறுநீரகம் 75 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவக் குழுவினர் அறிக்கை வெளியிட்டு உள்ளனர். இந்த தகவலை அவரை பார்த்துவிட்டு வந்த மகன் தேஜஸ்வி யாதவ் உறுதி செய்துள்ளார்.

அண்மையில் பீகார் சட்டசபை தேர்தல் முடிவில் ராஷ்டிரிய ஜனதா தளம் தனிப்பெரும் கட்சியாக உருவாக தேஜஸ்வி யாதவ் காரணம் குறிப்பிடத்தக்கது.