டெல்லி: அக்னிபாதை திட்டத்தின் கீழ் ஏற்கனவே கடற்படையில் சேர ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கிய நிலையில், ஜூலை 1ந்தேதி முதல் ராணுவம் மற்றும் கடற்படையில் சேர ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவத்தின் முப்படைகளுக்கும் அக்னிபாதை திட்டத்தின் கீழ், 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி முதல்கட்டமாக விமானப்படையில் சேர கடந்த மாதம் (ஜுன்) 24ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜூலை 5ந்தேதியுடன் முடிவடைந்தது. அக்னிபாத் திட்டத்தின் கீழ் விமானப்படை பணிக்கு இதுவரை  1லட்சத்திற்கு மேற்பட்டட விண்ணப்பங்கள் குவிந்துள்ளது என விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து,  ராணுவம், கடற்படைக்கான அக்னிவீரர்கள் தேர்வுக்கான ஆன்லைன் முன்பதிவும் நேற்று முதல் தொடங்கியது. இது தொடர்பாக ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள டிவிட்டில், ‘கடற்படை, ராணுவத்துக்கான அக்னிவீரர் தேர்வு ஜூலை1 முதல் தொடங்குகிறது. ராணுவத்தில் இணைந்து, நாட்டுக்கு அக்னிவீரர்களாக சேவையாற்றும் உங்கள் கனவை நனவாக்குங்கள்,’ என்று கூறப்பட்டுள்ளது.