சென்னை

தமிழக சட்டசபையில் இன்று ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை எதிர்த்து தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது. 

நேற்று முன் தினம் தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இது ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. .

ஆளுநர் தனது உரையை வாசிக்க ஆரம்பித்த உடன் சட்டசபை துவங்கும் முன்பாகவும் முடியும்போதும் தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என்ற தனது வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டு, தேசிய கீதத்திற்கு போதிய மரியாதை தரப்படவில்லையென்று குறிப்பிட்டார்.

ஆளுநர் உரையில் தகவல் ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் தன்னால் ஏற்க முடியாத பகுதிகள் இடம்பெற்றிருக்கின்றன என்றும் அவற்றை வாசிப்பது அரசியல் சாசனத்தை அவமதிப்பதாக அமையும் என்றும் கூறிவிட்டு, உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி அமர்ந்தார். பிறகு ஆளுநர் உரையின் தமிழாக்கத்தைச் சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.

உரையை வாசித்து முடித்த பிறகு பேசிய சபாநாயகர் அப்பாவு, சில கருத்துகளை முன்வைத்ததும், ஆளுநர் ஆர்.என். ரவி அவையிலிருந்து வெளியேறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

.நேற்று தமிழ்நாடு சட்டசபையின் 2-வது நாள் அமர்வு நேற்று தொடங்கியது. அதில் முதலாவதாக தே.மு.தி.க. தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் மறைவுக்குத் தமிழக சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

தவிர முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின். மறைவு குறித்த இரங்கல் குறிப்புகளும், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆ:ளுநர் வெங்கிடரமணன், கண் டாக்டர் பத்ரிநாத், தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி, தமிழக முன்னாள் தலைமைச் செயலாளரும் ஒடிசாவின் முன்னாள் ஆளுநருமான ராஜேந்திரன் ஆகியோரின் மறைவு குறித்த இரங்கல் தீர்மானமும் வாசிக்கப்பட்டது.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு சட்டமன்ற உறுப்பினர்கள். விவாதம் தொடங்கி நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்குச் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர்.

இன்று தமிழக சட்டசபையில் ‘ஒரே நாடு ஒரு தேர்தல்’ திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தித் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது.இந்தத் தனித்தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் முன்மொழிகிறார்.