சென்னை

மிழக ஆளுநர் மாளிகை  முன்பு இரு சக்கர வாகனத்தில் வந்து பெட்ரோல் குண்டு வீசிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகை முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசி உள்ளார். அந்த பகுதியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அக்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் பெட்ரோல் குண்டு வீசிய நபரை மடக்கிப் பிடித்தனர்.

விசாரணையில் அவர் தேனாம்பேட்டையைச் சேர்ந்த வினோத் என்பது தெரிய வந்துள்ளது. முதல்கட்ட விசாரணையில், தான் சிறையில் இருந்த காலத்தில் வெளியே வர ஆளுநர் ஒப்புதல் தராததால் பெட்ரோல் குண்டு வீசியதாகத் தெரிவித்துள்ளார்.

பிடிபட்ட வினோத்திடம் இருந்து மேலும் 2 பெட்ரோல் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், கிண்டி காவல்நிலைய காவலர்கள் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிலையில் ஆளுநரின் செயலாளர் கிரிலோஷ் குமார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்துள்ளார்.