திருச்சி

திருச்சிக்கு சிங்கப்பூரில் இருந்து வந்தவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆனதால் ஒமிக்ரான் பாதிப்பு குறித்த சோதனை நடைபெறுகிறது.

தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரான் பரவல் உலகில் பல நாடுகளில் காணப்படுகின்றன.  சிங்கப்பூரிலும் இந்த ஒமிக்ரான் பரவல் கண்டறியப்பட்டுள்ளது.   எனவே வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் நபர்களின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்படுகின்றன.

அவ்வகையில் தஞ்சையைச் சேர்ந்த நபர் ஒருவர் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் வந்துள்ளார்.  அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இவருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்துள்ளது.  இதையொட்டி இவருடைய மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டு தற்போது சோதனைகள் நடைபெற்று வருகிறது.

இவர் திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் தனிமையில் வைக்கப்பட்டுள்ளார்.   அங்கு அவருக்குத் தீவிர கண்காணிப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.