புதுடெல்லி: நடைப் பந்தய வீராங்கனை பிரியங்கா கோஸ்வாமி உள்ளிட்ட, 5 இந்திய தடகள நட்சத்திரங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. பிரியங்கா, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றவர்.

பெங்களூருவிலுள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, இது உறுதி செய்யப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு, ஆசிய விளையாட்டில், 1500 மீட்டரில் தங்கப் பதக்கம் வென்ற ஜின்சன் ஜான்சன், தடை தாண்டும் ஓட்ட வீராங்கனை சிந்தா யாதவ் ஆகியோரும் இந்த பாசிடிவ் பட்டியலில் அடக்கம்.

மேலும், நடைப் பந்தய பயிற்சியாளர் அலெக்ஸாண்டர் அட்ஸிபஷேவும் தொற்றுக்கு ஆளாகியுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்ற மற்றொரு நடைப் பந்தய வீரர் கேடி இர்ஃபானுக்கு பரிசோதனை செய்ததில் நெகடிவ் முடிவு வந்துள்ளது. இவர் ஜான்சனுடன் தொடர்பில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாசிடிவ் ரிசல்ட் பெற்ற பிரியங்கா கோஸ்வாமி, சிந்தா யாதவ் மற்றும் இதர இருவர், பெங்களூருவின் எஸ்ஏஐ மையத்தில், தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.