புபனேஷ்வர்: ஃபனி புயல் காரணமாக, ஒடிசா மாநிலத்தின் 10 மாவட்டங்களில் உள்ள 34 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த மறுவாக்குப்பதிவு மே 19ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த வாக்குச் சாவடிகளில் 3, ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

ஃபனி புயலில் ஒடிசாவின் பூரி மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பூரி தவிர, கட்டாக், தியோகர், ஆங்குல், கியோன்ஜார், குர்தா, ஜாஜ்பூர், பலாசோர், மயூர்பன்ஜ் மற்றும் ஜகத்சிங்பூர் ஆகிய மாவட்டங்களின் சில வாக்குச் சாவடிகள் மறு வாக்குப்பதிவை சந்திக்கவுள்ளன.

மேற்கூறிய 34 வாக்குச் சாவடிகளில், 3வது மற்றும் 4வது கட்ட தேர்தலின்போது சில பிரச்சினைகள் ஏற்பட்டதால், தற்போது மறுவாக்குப் பதிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.