ஒடிசா:
கொரோனா வாரியார்களுக்கு நினைவு சின்னம் கட்ட ஒடிசா அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து ஒடிசா மாநில பணிகள் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் மொஹாபத்ரா, சுற்றறிக்கையில், கொரோனா வாரியார்களுக்கு நினைவு சின்னம் கட்ட ஒடிசா அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நினைவுச்சின்னம் புவனேஸ்வரில் உள்ள பிஜு பட்நாயக் பூங்காவில் கட்டப்பட உள்ளது. இந்த நினைவுச்சின்னம் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் தயாராகி விடும் என்று குறிப்பிடபட்டுள்ளது.

மேலும் இந்த் நினைவுச்சின்னத்தின் வடிவமைப்பு மற்றும் கட்டமைப்பை இறுதி செய்ய கட்டடக் கலைஞர்களை அரசு ஈடுபடுத்த உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.