டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு தாயகம் திரும்பிய இந்திய ஹாக்கி அணி வீரர்களை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் இன்று கௌரவித்தார்.
வீரர்கள் அனைவருக்கும் 5 லட்ச ரூபாய் பரிசுத் தொகை அறிவித்த நவீன் பட்நாயக், மேலும் 10 ஆண்டுகளுக்கு ஹாக்கி விளையாட்டை ஊக்குவிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஒடிசா அரசு மேற்கொள்ளும் என்று கூறினார்.
இவர்களின் ஒலிம்பிக் சாதனை குறித்து பெருமை கொள்கிறேன், இந்த சாதனை பல இளைஞர்களை விளையாடடில் கவனம் செலுத்தி நாட்டிற்கு புகழ் சேர்க்க முன்னுதாரணமாக அமைந்திருக்கிறது என்று பேசினார்.
Glad to felicitate the Indian Women’s and Men's Hockey teams after their historic feat in #Tokyo2020. Proud of the Hockey Olympians for their achievement. May the remarkable journey inspire many others to embrace sports and bring laurels for the country. #OdishaWelcomesOlympians pic.twitter.com/HSg4ZQfduK
— Naveen Patnaik (@Naveen_Odisha) August 17, 2021
இந்த ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஆடவர் அணி மற்றும் நூலிழையில் பதக்கத்தைத் தவறவிட்ட மகளிர் அணி உள்ளிட்ட இந்திய ஹாக்கி அணிக்கு தேவையான உதவிகளை ஏற்கனவே நவீன் பட்நாயக் தலைமையிலான ஒடிசா அரசு செய்துவருவது குறிப்பிடத்தக்கது.