ஆர் எஸ் எஸ் சின் அடங்காக் கனவு

எப்படியும் தமிழகத்தில் வெற்றி பெற்று இங்கே வடவர்களின் கொடியைப் பறக்க விட வேண்டும் என்பது ஆர். எஸ். எஸ். சின் அடங்காக் கனவு!

ஆனால், தமிழகத்தில் இவர்களின் ‘ஆரியப் பருப்பு’ வேக வில்லை! தொடர்ந்து எல்லாத் தேர்தல்களிலும் படு தோல்விகள்.. அவமானங்கள்!

இருந்தாலும், தோற்றுப் போன முருகனுக்கு மத்திய அமைச்சர், அண்ணாமலைக்கு மாநிலத் தலைவர் பதவிகள்… முன்னாள் நிர்வாகிகள் இல. கணேசன், தமிழிசை ஆகியோருக்கு ஆளுநர் பதவிகள்…

இவையெல்லாம் புலியைப் பிடிக்கக் கூண்டில் கட்டப் பட்ட ‘ஆட்டுக் குட்டிகள்’ என்பதைத் தமிழக மக்கள் நன்றாக புரிந்து கொண்டு சிரிக்கிறார்கள்!

எனவே தனது மாநிலத் தலைவர் அண்ணாமலை, மற்றும் தங்களால் ‘வாங்க பட்ட’ சீமான் ஆகியோரை வைத்து தமிழகத்தில் ஒருவித அவதூறு.. மற்றும் அராஜக நடை அரசியலை ஆர். எஸ். எஸ். -பா.ஜ.க.முன்னெடுத்து  வருகிறது!

ஆனால் உள்ளாட்சித் தேர்தலில் ‘ஒத்தை’ ஓட்டு வாங்கியுள்ள  பா. ஜ. க. வுக்கு தமிழகத்தில் கதவுகள் என்றுமே திறக்காது என்கிறார்கள் தமிழக மக்கள்!!!

நன்றி : ஓவியர் இரா. பாரி