கொல்கத்தா: “பைத்தியக்காரிக்கு பதிலளிப்பது சரியாக இருக்காது என்று மம்தா குறித்து காங்கிரஸ் தலைவர் ஆதின்ரஞ்சன் சவுத்திரி காட்டமாக கூறினார்.

5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. உ..பி.யில் போட்டியிட்ட பெரும்பாலான தொகுதிகளில் டெபாசிட்டையே பறி கொடுத்து உள்ளது. இது கடுமையான விமர்சனங்களை எழுப்பி உள்ளது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி கூறுகையில், “காங்கிரஸ் நம்பகத்தன்மையை இழந்து வருகிறது, காங்கிரசை நம்பி இருக்க முடியாது.  காங்கிரஸ் விரும்பினால் 2024 பாராளுமன்ற தேர்தலை  அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படலாம் என்று அழைப்பு விடுத்தார்.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த பாராளுமன்ற மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவர் ஆதின் ரஞ்சன் சவுத்திரி, மம்தாவை கடுமையாக விமர்சித்தார். பைத்தியக்காரிக்கு  பதிலளிப்பது சரியாக இருக்காது என்றவர், பாஜகவை மகிழ்விக்க மம்தா கோவா சென்று காங்கிரசை தோற்கடித்ததாக  குற்றம் சாட்டினார்.

மேலும், காங்கிரஸ் கட்சிக்கு  நாடு முழுவதும் 700 எம்எல்ஏக்கள் உள்ளனர். மம்தா பனர்ஜி அத்தனை எம்எல்ஏக்களை உள்ளனரா என்று கேள்வி எழுப்பியதுடன், எதிர்க் கட்சிகள் பெற்ற மொத்த வாக்குப்பகிர்வு சதவீதத்தில், 20 சதவீதம்  காங்கிரஸ் வசம்தான் உள்ளது. மம்தாவிடம் இருக்கிறதா? என்று சாடியதுடன், காங்கிரசுக்கு எதிராக ஏன் கருத்து கூறுகிறீர்கள் என்று மம்தாவை விளாசியவர்,  காங்கிரஸ் இல்லையென்றால் மம்தா பானர்ஜி போன்றவர்கள் பிறந்திருக்க மாட்டார்கள். அவர் இதை நினைவில் கொள்ள வேண்டும்பாஜகவை மகிழ்விக்க மம்தா இப்படி கூறி வருகிறார்,   பாஜகவின் ஏஜெண்ட் போல செயல்படுகிறார் என்றும், பாஜகவை மகிழ்விக்க கோவா சென்று காங்கிரசை தோற்கடித்தீர்கள். கோவாவில் காங்கிரசை பலவீனப்படுத்தினீர்கள், இது அனைவருக்கும் தெரியும்” என்றும் சவுத்ரி காட்டமாக கூறினார்.