ம்பால்

ணிப்பூரில் தற்போது இயல்பு வாழ்க்கை மெல்லத் திரும்புவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மணிப்பூர் மக்கள் தொகையில் 53 சதவீதம் பேர் இருக்கும் மேதே சமூக மக்களைப் பட்டியல் பழங்குடியினர் பிரிவில் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதன்கிழமை நடந்த பழங்குடியினர் அமைதி பேரணியில் இரு பிரிவினருக்கும் இடைய மோதல் ஏற்பட்டது.  பிறகு இது வன்முறையாக மாறி மாநிலம் முழுவதும் பரவியது. இந்த வன்முறையில் மணிப்பூர் மாநிலமே பற்றி எரிந்தது.

எனவே வன்முறையைக் கட்டுப்படுத்த மாநில அரசு, ராணுவம் மற்றும் அஸ்ஸாம் ரைஃபில் படையினரை வரவழைத்தது. அத்துடன் மாநிலத்தின் 8 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இணைய சேவையும் முடக்கப்பட்டன.  தவிர வன்முறையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கலவரக்காரர்களைக் கண்டதும் சுட உத்தரவிடப்பட்டது. ராணுவம் மற்றும் அஸ்ஸாம் ரைஃபில் படையினர் வன்முறையைக் கட்டுப்படுத்த குவிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை அங்கிருந்து 23 ஆயிரம் வெளியேற்றப்பட்டதாகத் தெரிகிறது. மீண்டும் கலவரங்கள் வெடிக்காமல் இருப்பதை உறுதி செய்ய அங்கு ராணுவம் வான்வழி கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது.  இதனிடையில் ஊரடங்கு உத்தரவு காலை 7 மணி முதல் 10 மணி வரை தளர்வு செய்யப்பட்டுள்ளது.   இந்த ஊரடங்கு தளர்வு மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங்,  ”மணிப்பூர் வன்முறை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். தற்போது மெல்ல  மணிப்பூர் மாநிலத்தில் நிலைமை சீரடைந்து வருகிறது. ராணுவத்தினர் சுற்றுலா பயணிகள், பிற மாநில மாணவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.