டெல்லி: கொரோனா சிகிச்சைக்கு ரெம்டெசிவிர், லோபினாவிர், ரிட்டோனாவிர், ஹைட்ராக்சிகுளோரோகுயின் ஆகிய மருந்துகள் பலனளிக்கவில்லை என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இன்னமும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. அனைத்தும் பரிசோதனை நிலையிலேயே உள்ளன. ஆபத்தான நிலையில் கொரோனா நோயாளிகளை காப்பாற்ற  ரெம்டெசிவிர், ஹைட்ராக்சி குளோரோகுயின் போன்ற மருந்துகள் பயன்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, பெரும்பாலான நாடுகள் இந்த மருந்துகளை அதிகளவு  இறக்குமதி செய்தன. இந்தியாவிலும் இந்த மருந்துகள் பயன்படுத்தப்பட்டன. இந் நிலையில் ரெம்டெசிவிர், லோபினாவிர், ரிட்டோனாவிர், ஹைட்ராக்சி குளோரோகுயின் ஆகிய மருந்துகள் கொரோனா சிகிச்சைக்கு பலன் அளிக்க வில்லை என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் கீழ் இணைந்து நடத்தப்பட்ட சோதனையில் தெரியவந்துள்ளதாக ஐசிஎம்ஆர் கூறி உள்ளது.