பெரம்பலூர்:

அரசை வீழ்த்த நினைத்தவர்கள் வீழ்ந்து போவார்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

பெரம்பலூரில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசுகையில், ‘‘இந்த அரசை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள். ஜெயலலிதாவின் ஆத்மா இருக்கும் வரை ஆட்சியை அசைக்க முடியாது. தொண்டர்கள் விசுவாசத்துடனும், தியாகத்துடனும் இருக்க வேண்டும்’’ என்றார்.