Skip to content
  • Sun. Jul 12th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
இந்தியா

பினராயி விஜயன் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்… காங்கிரஸ் அதிரடி

Jul 17, 2020

திருவனந்தபுரம்:

அரபு தூதரகம் பெயரில் நடைபெற்ற தங்கக்கடத்தல் விவகாரம் கேரளாவில் அரசியல் பூகம்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் முக்கிய அரசு அதிகாரிகள் உள்பட ஆட்சியாளர்கள் பலருக்கும் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்டு  அரசுக்கு எதிராக காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறது.

கேரளாவில் உள்ள  ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் சரக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட சுமார் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள  30 கிலோ தங்கக்கட்டிகள் சுங்க அதிகாரிகளிடம் சிக்கியது. இந்த கடத்தல் விவகாரத்தில், முதல்வரின் முதன்மைச் செயலாளருக்கு தொடர்பு உள்ளதும் தெரிய வந்துள்ளது. அவர் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
இந்த கடத்தல் வழக்கு தொடர்பாக, கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தவருமான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளி சந்தீப் நாயர், தூதரக முன்னாள் ஊழியர் சரித்குமார், சந்தீப் நாயரின் மனைவி சவுமியா, ரமீஸ் உள்பட பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும், சபாநாயகர் ராமகிருஷ்ணன் மீதும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் குற்றம் சாட்டியுள்ளது.
இதனால்,  காங்கிரஸ், முஸ்லிம் லீக், பாரதியஜயதான உள்பட எதிர்க்கட்சிகள் கேரள அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளன. முதல்வர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில், கேரள மாநில அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி முடிவு செய்துள்ளது.  இது தொடர்பாக காங்கிரஸ் சார்பில் சட்டசபை செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரம் மாநிலத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Kerala Gold Smuggling , கேரள தங்க கடத்தல், நம்பிக்கையில்லா தீர்மானம், பினராயி விஜயன்,

Post navigation

கெலாட் அரசை கவிழ்க்க மத்திய அமைச்சர் பேரம்..? காங். வெளியிட்ட தொலைபேசி உரையாடல்
'கொரோனில்' என்ற பெயரை பயன்படுத்த பதஞ்சலிக்கு தடை… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

Related Post

இந்தியா உலகம்

VFS மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

இந்தியா

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை தொடர்பாக பீகார் மற்றும் உ.பி.யில் 3 பேர் கைது

இந்தியா

மே 9-ல் மேற்கு வங்கம், மே 12-ம் தேதி அசாம் மாநிலங்களில் பாஜக அமைச்சரவை பதவியேற்பு விழா:

உலகம்

உலகம் விளையாட்டு

“Red Card” முதல் “Trump Card” வரை… கால்பந்து போட்டிகளில் பின்பற்றப்படும் கார்டுகளும் அவற்றின் வரலாறும் விதிமுறைகளும்…

July 10, 2026 Sundar
உலகம்

அடுத்த 25 ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பு இரட்டிப்பாகலாம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

July 10, 2026 Sundar
உலகம்

“மீண்டும் கப்பல்களைத் தாக்கினால் இன்னும் பலமாக அடிப்போம்!” – ஈரானுக்கு டிரம்பின் வழக்கமான எச்சரிக்கை

July 9, 2026 Sundar
உலகம்

ஈரான் தாக்குதல் அச்சம்: கத்தார் பரிசாக வழங்கிய விமானத்தில் பயணம் செய்வதைத் தவிர்த்த டிரம்ப்

July 9, 2026 Sundar
இந்தியா உலகம்

VFS மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

May 28, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer