ராய்ப்பூர், சத்தீஸ்கர்

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகல் தலையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் ஊழல் நடைபெறுவதாகவும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனவும் , மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து உள்ளதாகவும் கூறி காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டு வந்தது.

நேற்று நள்ளிரவு வரை பாஜக கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதம் சத்தீஸ்கர் சட்டசபையில் நீடித்தது. பிறகு இன்று அதிகாலை வாக்கெடுப்பு நடந்த நிலையில் இதில் பாஜக கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியடைந்தது.

மொத்தம் 90 தொகுதிகளைக் கொண்ட  சத்தீஸ்கர் சட்டப்பேரவையில் 71 காங்கிரஸ் உறுப்பினர்களும் 13 பாஜக உறுப்பினர்களும் உள்ளனர். இதனால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் காங்கிரஸ் வெற்றி பெற்று பாஜக தோல்வியடைந்தது.