மும்பை: பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானி தாத்தாவானார். அவரது மகன் ஆகாஷ்அம்பானி தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அம்பானி குழு செய்தித்தொடர்பாளர் தெரிவித்து உள்ளார்.

முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி, ஸ்லோகா மேக்தா திருமணம் கடந்த 2019ம் ஆண்டு மார்ச் 10ந்தேதி அன்று கோலாகலமாக  நடைபெற்றது. அதில், திரையுலகம் மற்றும் அரசியல் பிரபலங்கள் நேரில் கலந்துகொண்டு தம்பதிகளை வாழ்த்தினர்.

இந்த நிலையில், தற்போது ஆகாஷ் ஸ்லோகா தம்பதிகளுக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தாய் மற்றும் மகன் இருவரும் நன்றாக இருக்கிறார்கள். இதை  அம்பானி குடும்ப செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தி உள்ளார்.

இதனால்,  முகேஷ் அம்பானி நீதா தம்பதியினர் முதன்முறையாக தாத்தா பாட்டிகளாக  மாறி உள்ளனர். இதனால், அவர்கள்  ஆனதில் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும், அம்பானியின் தாயார்  கோகிலாபென் அம்பானியின் பெரிய பேரனை மகிழ்ச்சியுடன் வரவேற்றார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வரவேற்றனர்.

அம்பானியின் குடும்பத்தில் ஆண்வாரிசாக பேரன் பிறந்துள்ளதால், குடும்பத்தினர் மகிழ்ச்சியில் கொண்டாடி வருகின்றனர்.