டில்லி

ன்பது வயது இஸ்லாமிய சிறுமி தொடர் பலாத்காரம் செய்யப்பட்டு வந்தது டில்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டில்லி நரேலா பகுதியில் 9 வயது சிறுமி பாலியல் தொடர்ந்து பலாத்காரம் செய்யப்பட்டு வந்திருக்கிறார். நேற்று முன்தினம் சிறுமிக்கு உடல் நலம் மோசமா கிப்போயிருக்கிறது. பெற்றோர் தீவிரமாய் விசாரித்திருக்கிறார்கள்.

அப்போது அவர் உருது பள்ளியான மதரசாவின் ஆசிரியரால் தொடர் பலாத்காரம் செய்யப்பட்டதை கூறி கதறி உள்ளார்,

பெற்றோரிடம் அவர் கூறிய தகவலின்படி இது குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என ஆசிரியர் மிரட்டிவைத்திருந்ததும் தெரியவந்தது.

பெற்றோர்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.   அதைத் தொடர்ந்து

மருத்துவ பரிசோதனையில் சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளாகியிருப்பது உறுதியானது.

இதையடுத்து உருது ஆசிரியர் ஜகீர் ஆலமை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்