பெங்களூர்:
ர்நாடக மாநிலத்தில் வரும் 28ஆம் தேதி முதல் ஜனவரி 5ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமைக்கிரான் இந்தியாவில் படிப்படியாகப் பரவி வருகிறது என்பதும் 400க்கும் அதிகமானோர் இந்தியாவில் ஒமைக்கிரான் தொற்றால்பாதிக்கப்பட்டுள்ளனர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கர்நாடகாவில் நேற்று ஒரே நாளில் 29 பேர்களுக்கு ஒமிகிரான் வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில் அம்மாநிலத்தில் நாளை மறுநாள் முதல் இரவுநேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் நாளை மறுநாள் முதல் 10 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும், பொதுமக்கள் இந்த ஊரடங்கிற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. இதனால் அம்மாநில மக்கள் பெரும் பரபரப்பு அடைந்துள்ளனர்.