சென்னை

ன்று காலை முதல் தமிழகத்தின் 9 மாவட்டங்களில் என் ஐ ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை செய்து வருகின்றனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டம், கும்பகோணத்திற்கு அடுத்து உள்ள திருபுவனம் பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் கொலை செய்யப்பட்டார். இதையொட்டி 13 பேர் கைது  செய்யப்பட்டு உள்ள போதிலும் 5 பேர் தலைமறைவாகி உள்ளனர்.

ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாகத் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை முதல் திருச்சி, விழுப்புரம், தஞ்சை, நெல்லை, உசிலம்பட்டி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சோதனை 15-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெறுகிறது என கூறப்படுகிறது. நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் முபாரக் இல்லத்தில் இந்த சோதனை நடைபெறுகிறது.

மேலும் கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெறுகிறது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள துறவி கிராமத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.