திருவனந்தபுரம்: நாட்டையே உலுக்கிய கேரள தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னாவின் என்ஐஏ காவல் மேலும் 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் சில தினங்களுக்கு முன் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு  ஒரு பார்சல் வந்தது. அதை ஆய்வு செய்த போது உள்ளே ரூ. 15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வழக்கில் தலைமறைவான ஸ்வப்னா பெங்களூருவில் இருப்பதாக என்ஐஏவிற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து என்ஐஏ அதிகாரிகள் அவரையும், சந்தீப் நாயரை கைது கைது செய்தனர் .
தொடர்ந்து, கொச்சியில் உள்ள என்ஐஏ நீதிமன்றத்தில் ஸ்வப்னா மற்றும் சந்தீப் நாயரை என்ஐஏ அதிகாரிகள் ஆஜர்ப்படுத்தினர். அப்பொழுது ஸ்வப்னா, சந்தீப் நாயரை 21ம் தேதி வரை என்ஐஏ காவலில் விசாரிக்க அனுமதி அளித்தது.
இந்நிலையில்  ஸ்வப்னா மற்றும் சந்தீப் நாயருக்கு  காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் 3 நாள் காவல் விதிக்கப்படுவதாக என்ஐஏ நீதிமன்றம் தெரிவித்துள்ளது. என்ஐஏ கோரிக்கையை ஏற்று இந்த உத்தரவை பிறப்பிப்பதாக நீதிமன்றம் கூறியுள்ளது.