டில்லி:

பாதுகாப்பு படை வீரர்கள் பயணம் மேற்கொள்ளும் போது டோல் பிளாசா பணியாளர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

பணி நிமித்தமாக ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு படையினர் பயணம் மேற்கொள்ளும் போது டோல் பிளாசா பணியாளர்கள் எழுந்து நின்று மரியாதை (சல்யூட்) செலுத்த வேண்டும்.

அவர்களின் முன்மாதிரியான பணிக்கு இந்த மரியாதை செலுத்துவது அவசியம் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.