Skip to content
  • Sat. Jul 11th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
இந்தியா

என்ஜிஓக்களுக்கு கிடுக்கிப்பிடி! புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தது மத்திய அரசு

Nov 12, 2020

டெல்லி: வெளிநாடுகளில் இருந்து  நிதி பெற விரும்பும் என்ஜிஓக்களுக்கு மத்தியஅரசு கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. இதுபோன்ற அமைப்புகள் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் செயல்பட்டிருந்தால் மட்டுமே நிதிஉதவி பெற முடியுங்ம என புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது.

மதசம்பந்தமான பல்வேறு என்ஜிஓ-க்கள் கல்வி, ஆன்மீகம், சமூக சேவை என வெளிநாடுகளில் நிதி பெற்று இந்தியாவில் முறைகேடான செயல்களில் ஈடுபட்டு வருவதாக பல ஆண்டுகளாக  குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.  இந்த நிலையில், மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து நிதிபெறுவது தொடர்பாக புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது.

அதன்படி, வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெறுவதற்கான வழிமுறைகளில் தற்போது மத்திய அரசு சில மாற்றங்களை அறிவித்துள்ளது.
வெளிநாட்டு நிதி உதவி பெறும் அமைப்புகள் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடக்கூடாது.
அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளில் பங்கேற்கும் விவசாயிகள் மற்றும் மாணவர் சங்கங்கள் நிதி உதவியை பெற முடியாது .

வெளிநாட்டிலிருந்து நிதி வழங்கக் கூடியவர்கள் என்ன காரணத்திற்காக நிதியை வழங்குகிறார்கள் என்பதற்கான கடித்தை சமர்பிக்க வேண்டும்.

வெளிநாட்டு நிதி பெற விரும்பும் அமைப்புகள் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் செயல்பட்டிருக்க வேண்டும்.

இந்த மூன்று ஆண்டுகளில் குறைந்தது ரூபாய் 15 லட்சத்தை நலத்திட்டத்திற்காக செலவிட்டிருக்க வேண்டும் 
அதேபோல வெளிநாட்டு நிதி உதவிகளைப் பெறுவதற்காக அனுமதி கோரி விண்ணப்பிக்க கூடிய நிறுவனங்கள், அதற்காக செலுத்த வேண்டிய கட்டணங்களையும் அரசு உயர்த்தியுள்ளது.
ஏற்கனவே அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினரும் வெளிநாட்டு நிதி உதவிகளை பெறுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த புதிய விதிமுறைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

Post navigation

பீகார் சட்டமன்ற தேர்தலில் 7லட்சம் மக்கள் நோட்டாவுக்கு வாக்களிப்பு… மக்களின் மனநிலை மாறுகிறதா?
சிராக் பஸ்வான் கட்சி தனித்து போட்டியிடாமல் இருந்திருந்தால் லாலுவின் இரு மகன்களும் தோற்று இருப்பார்கள்…

Related Post

இந்தியா உலகம்

VFS மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

இந்தியா

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை தொடர்பாக பீகார் மற்றும் உ.பி.யில் 3 பேர் கைது

இந்தியா

மே 9-ல் மேற்கு வங்கம், மே 12-ம் தேதி அசாம் மாநிலங்களில் பாஜக அமைச்சரவை பதவியேற்பு விழா:

உலகம்

உலகம் விளையாட்டு

“Red Card” முதல் “Trump Card” வரை… கால்பந்து போட்டிகளில் பின்பற்றப்படும் கார்டுகளும் அவற்றின் வரலாறும் விதிமுறைகளும்…

July 10, 2026 Sundar
உலகம்

அடுத்த 25 ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பு இரட்டிப்பாகலாம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

July 10, 2026 Sundar
உலகம்

“மீண்டும் கப்பல்களைத் தாக்கினால் இன்னும் பலமாக அடிப்போம்!” – ஈரானுக்கு டிரம்பின் வழக்கமான எச்சரிக்கை

July 9, 2026 Sundar
உலகம்

ஈரான் தாக்குதல் அச்சம்: கத்தார் பரிசாக வழங்கிய விமானத்தில் பயணம் செய்வதைத் தவிர்த்த டிரம்ப்

July 9, 2026 Sundar
இந்தியா உலகம்

VFS மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

May 28, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer