நியூயார்க்: அமெரிக்காவில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ளதைத் தொடர்ந்து, அங்கு கொரோனா கட்டுபாடுகள் முழுமையாக நீக்கப்பட்டு உள்ளது. இதை நியூயார்க் மக்கள் வானவேடிக்கையுடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

உலகிலேயே கொரோனா அதிக பாதிப்பு உள்ள நாடாக அமெரிக்க திகழ்ந்து வருகிறது. அங்கு ஜோபைடன் அதிபராக பதவி ஏற்றதும், பெருந்தொற்று பரவலை தடுக்க அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதையடுத்து கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதுடன், தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. இதனால் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் முகக்கவசம் அணியவில்லை என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு உள்ளது. இதை பட்டாசு வான வேடிக்கையுடன் நியூயார்க் கொண்டாடுகிறது.

முன்னதாக செய்தியாளர்களிடம் 15ந்தேதி பேசிய  நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ,  மாநிலத்தின் 70% பெரியவர்களுக்கு குறைந்தது ஒரு டோஸ் கோவிட் -19 தடுப்பூசி கிடைத்துள்ளது. “நியூயார்க் மாநிலம் நாட்டின் வேறு எந்த பெரிய மாநிலத்தையும் விட பெரியவர்களுக்கு ஒரு பெரிய பங்கை முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளது”  “இது ஒரு முக்கியமான மைல்கல், மேலும் பலவற்றைச் செய்ய நாங்கள் தொடர்ந்து செல்லப் போகிறோம் என்றவர், நியூயார்க்கில்,  அனைத்து மாநில-கட்டாய கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளையும் நீக்குகிறது. இருந்தாலும், நியூயார்க்கர்களை தடுப்பூசி போட அரசு தொடர்ந்து ஊக்குவிக்கும் என்றவர், நியூயார்க் நகருக்கு இது “முக்கியமான நாள்” என்று அழைத்தார்.

மேலும், வணிக மற்றும் சமூக அமைப்புகளில் உள்ள கட்டுப்பாடுகள் உடனடியாக நீக்கப்படும். அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் சில வரம்புகள் நடைமுறையில் இருக்கும் என்றும், பொது போக்குவரத்து மற்றும் சுகாதார அமைப்புகளில் தணிப்பு நடவடிக்கைகள் இன்னும் தேவை என்றும் குவோமோ கூறினார்.

முன்னதாக அங்கு  தொழில் சார்ந்த கட்டுப்பாடுகள், சில்லறை விற்பனையாளர்களுக்கு 50%, ஜிம்களுக்கு 33% மற்றும் திரைப்பட தியேட்டர்களுக்கு 33% அல்லது 100 பேருக்கு குறைவான வரம்புகளை உள்ளடக்கியது. தற்போது அவைகள் நீக்கப்பட்டு உள்ளது. ‘ அதன்படி,  வணிகங்களுக்கு இனி தடுப்பூசி போடப்பட்டவர்கள் முகமூடி அணிந்து ஆறு அடி (2 மீட்டர்) தூரத்தை பராமரிக்க வேண்டிய அவசியமில்லை. அறியப்படாத குடியிருப்பாளர்கள் இன்னும் முகமூடிகளை அணிந்து, பொதுவில் தூரத்தை பராமரிக்க வேண்டும், மேலும் சில நிகழ்வு நடைபெறும் இடங்களுக்கு நுழைவதற்கு சமீபத்திய எதிர்மறை கொரோனா வைரஸ் பரிசோதனையின் ஆதாரத்தைக் காட்ட வேண்டியிருக்கலாம் என்று கவர்னர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கப்பட்டுள்ளதை நியூயார்க் மக்கள் வானவேடிக்கையுடன் உற்சாக கொண்டாடினார். செவ்வாய்க்கிழமை இரவு, மாநிலம் முழுவதும் பட்டாசுகள் வெடித்து மக்கள் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர். நியூயார்க்  எம்பயர் ஸ்டேட் கட்டிடம் மற்றும் பிற மாநில அடையாளங்கள்  வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டும் நீல மற்றும் தங்க நிறங்களில் ஜொலித்தன.