பீஜிங்

சீன ஆய்வகத்தில் 3 நாட்களில் உயிரைக் கொல்லும் வைரஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சீன நாட்டில் உள்ள ஹெபெய் மருத்துவ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் எபோலாவின் சில பகுதிகளைப் பயன்படுத்தி ஒரு புதிய வைரசை வடிவமைத்துள்ளனர். இந்த நோய்க்கிருமி நோய் தொடர்பான ஆய்வுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் மூன்று நாட்களில் உயிரைப் பறிக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது.

இதற்காகஆய்வகத்தில் பயன்படுத்தப்பட்ட வெள்ளெலிகளை இந்த வைரஸ் மூன்று நாட்களுக்குள் கொன்றதாகக் கூறப்படுகிறது. லட்சக்கணக்கான உயிர்களைக் கொன்ற கொரான வைரஸ் COVID-19), சீனாவின் வுகான் நகரில் உள்ள ஆய்வகத்தில் தோற்றுவிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு ஏற்கனவே உள்ளது.

அதைப் போல இந்த புதிய வைரஸ் சீனாவில் இருந்து உருவாகியுள்ள புதிய அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.  எபோலா வைரசில் உள்ள கிளைகோபுரோட்டீனை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தியுள்ளனர். செல்களைப் பாதித்து மனித உடல் முழுவதும் பரவும். எபோலா நோயாளிகளில் காணப்படுவதைப் போன்ற கடுமையான உறுப்பு செயலிழப்பும் ஏற்படக்கூடும் எனக் கூறப்படுகிறது.

இந்த ஆய்வில் பயன்படுத்திய சில வெள்ளெலிகளின் கண் இமைகளின் மேற்பரப்பில் சிரங்குகள் ஏற்பட்டு, இறுதியில் அவற்றின் கண்பார்வை போய்விட்டது.  சீன ஆராச்ய்ச்சியாளர்கள் கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வக சூழலில் எபோலா அறிகுறிகளை ஆய்வு செய்வதே இந்த ஆய்வின் நோக்கம் எனவு, வைரஸ் வெளியே பரவாமல் இருக்க தடுப்பு உத்திகளை மேற்கொண்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.