சென்னை

தெற்கு ரயில்வே ரூ. 20 கோடி மதிப்பில் கிளாமபாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரி உள்ளது.

சென்னை தாம்பரத்தை அடுத்த கிளாம்பாக்கத்தில் தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்குப் பேருந்து சேவை அளிக்கும் வகையில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.

எனவே பயணிகளின் வசதிக்காக தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே ரெயில் நிலையம் அமைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இதையொட்டி தெற்கு ரயில்வே கிளாம்பாக்கம் அருகே 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ரயில் நிலையம் அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய ரயில் நிலையம், நடைமேடைகள் தொடர்பான நிரந்தர பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

இந்த நிலையம் 3 நடைமேடைகள் கொண்ட ரயில் நிலையமாக அமையவுள்ள நிலையில், இதனை ஓராண்டுக்குள் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.