டெல்லி: சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு தேர்வு முடிவு ஜூன் 20ந்தேதி வெளியாகும்  என  சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவித்து உள்ளது.

கொரோனாப தொற்று பரவல் காரணமாக சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை, வரையறுக்கும் முறை குறித்த அறிவிப்பை சிபிஎஸ்இ கல்வி வாரியம்  வெளியிடப்பட்டது.

அதன்படி, 10ம் வகுப்பு சிபிஎஸ்இ  மாணவர்களுக்கு, ‘யூனிட்’ தேர்வின் அடிப்படையில், 10 மதிப்பெண்கள், ‘மிட் டர்ம்’ தேர்வு அடிப்படையில், 30 மதிப்பெண்கள், ‘பிரீபோர்ட்’ தேர்வு அடிப்படையில், 40 மதிப்பெண்கள் என, 80 மதிப்பெண்கள் வழங்கப்படும்.மேலும், ‘இன்டர்னல் அசஸ்மன்ட்’ எனப்படும், உள்மதிப்பீடு அடிப்படையில், மீதமுள்ள, 20 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன், 20ம் தேதி, தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.