டெல்லி: நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிர தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், தொற்று பரவலை தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகளை  மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.

இதற்கான அறிவிப்பை  மத்திய அரசுக்கான முதன்மை அறிவியல் ஆலோசனை அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி,

வீடு, அலுவலகங்களில் காற்றோட்ட வசதி நம்மை பாதுகாக்கும் 

ஜன்னல் கதவுகளை திறந்து வைக்க வேண்டும்

, எக்ஸாஸ்ட் மின்விசிறியை பயன்படுத்த வேண்டும்

வெளிகாற்று வரும் வகையில் வீடு, அலுவலக அறைகளை வைத்திருக்க வேண்டும் 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஒரே நாளில் புதிதாக 2 லட்சத்து 76 ஆயிரத்து 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 3 ஆயிரத்து 874 பேர் உயிரிழந்துள்ளனர்.

மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 87 ஆயிரத்து 122ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 3 லட்சத்து 69 ஆயிரத்து 077 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதித்த 31 லட்சத்து 29 ஆயிரத்து 878 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள்.