காத்மண்டு:

நேபாளத்தில் கன மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர்.

நேபாளத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று கஸ்கி, தெஹ்ராதம், பியுதன் ஆகிய மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவில் சிக்கி 9 பேர் வரை மண்ணில் புதைந்து உயிரிழந்துள்ளனர். மேலும் முகு, கஸ்கி மாவட்டங்களில் உள்ள நதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய 4 பேரின் நிலை தெரியவில்லை.

மீட்புப்பணிகள் தீவிரமாக நடப்பதாக அரசு தெரிவித்துள்ளது. நேற்று ஆங்டிம் பகுதியில் நிகழ்ந்த நிலச்சரிவில் வீடு ஒன்று புதைந்தது. இதில் 4 பேர் பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.