நெல்லை: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக இறுதிப்பருவ தேர்வு செப்டம்பர் 21ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளில் ஏப்ரல் 2020ம் ஆண்டு இளநிலை, முதுநிலை இறுதி பருவத்திற்கான தேர்வு செப்டம்பர் 21ம் தேதியில் இருந்து நடைபெறும் என்று பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.

முதுநிலை, இளநிலை அறிவியல் மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் 1 மணி வரையும், வணிகவியல் மாணவர்களுக்கு மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் தேர்வு நடக்கும். இந்த தேர்வுகள் அனைத்தும் அவர்கள்  பயின்ற கல்லூரியில் நடைபெறும்.

இறுதிப்பருவ எழுத்து தேர்வு எழுத வேண்டிய எம்பில் மாணவர்கள் செப் 23 காலை 10 மணி முதல் 1 மணி வரை தேர்வுகள் நடைபெறும். தாம் பயின்ற  பயின்ற கல்லூரிக்கு வர இயலாத மாணவர்கள் அருகிலுள்ள மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளிலும் தேர்வு எழுத ஆவண செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.