டில்லி:

ருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ‘கட்-ஆப்’ மதிப்பெண்களில் 15 சதவீதம் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மருத்துவபடிப்பில் மேற்படிப்புகளான  எம்.டி., எம்.எஸ்., டி.என்.பி., டி.எம்., எம்.சி.எச்., போன்ற சிறப்பு உயர் மருத்துவ படிப்புக்கு  மாணவர் சேர்க்கை ‘நீட்’ தேர்வு முடிவு அடிப்படையிலேயே நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தற்போது  ‘கட்-ஆப்’ மதிப்பெண்களை 15 சதவீதம் குறைத்து மத்திய அரசு சுகாதாரம், குடும்ப நல அமைச்சகம் முடிவு எடுத்து உள்ளதாக அறிவித்து உள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை  வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவ உயர்படிப்பு படிக்க விரும்பும்  மாணவர்களுக்கான   ‘கட்-ஆப்’ மதிப்பெண்களை 15 சதவீதம் குறைக்கப்படுவதாகவும்,  இதன்மூலம் காலி இடங்களை நிரப்புவதில் முன்னேற்றம் ஏற்படும். இடங்கள் வீணாகாமல் தடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய சுகாதார மந்திரி ஜே.பி. நட்டா கூறுகையில், “மருத்துவ துறையை வலுப்படுத்துவதில் இது குறிப்பிடத்தகுந்த ஒரு நடவடிக்கை ஆகும். சுகாதார துறைக்கு அரசு முக்கியத்துவம் அளிப்பதை இது எடுத்துக்காட்டுகிறது. தரமான மருத்துவ சேவைகளை வழங்குவதில் போதுமான மனித சக்தி இருப்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்” என குறிப்பிட்டார்.

தற்போது கட்ஆப் மார்க் 15 சதவிகிதம் குறைக்கப்பட்டிருப்பதால் 18 ஆயிரம் பேர் பலன் அடைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.