சிதம்பரம்

மிழகத்தில் சிதம்பரம் அருகே உள்ள பழைய நல்லூர் பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகரை முதலை உயிரோடு விழுங்கி உள்ளது.

திமுக பிரமுகரான கோபாலகிருஷணன் என்னும் 65 வயது முதியவர் சிதம்பரம் அருகே உள்ள பழைய நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.  இவர் நேற்று இரவு சும்கார் 7 மணி அளவில் பழைய கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றார்.  அவர் குளிக்கும் போது திடீரென ஆற்றில் இருந்து வந்த ஒரு ராட்சத முதலை அவரை ஆற்றுக்குள் இழுத்ஹ்டுச் சென்றுள்ளது.  உடன் இருந்தவர்கள் அச்சத்தில் கூச்சல் இட்டுள்ளனர்.

இதையொட்டி அங்குத் திரண்ட கோபாலகிருஷணனின் உறவினர்கள் சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் அளித்தனர்.  அங்குச் சிதம்பரம் தீயணைப்புத் துறையினரும் வனத்துறையினரும் விரைந்து வந்து ஆற்றில் கோபாலகிருஷணனைத் தேடி உள்ளார். அவர் கிடைக்காததால் படகில் ஏறித் தேடி உள்ளனர்.

சுமார் 10.30 மைக்கு முதலை வாயில் வைத்து கடித்துக் கொண்டிருந்த கோபாலகிருஷணன் சடலம் தென்பட்டுள்ளது.   முதலையை விரட்டி விட்டு சடலத்தை மீட்டுள்ளனர்.   இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.   ஏற்கனவே கோபாலகிருஷணனின் சகோதரர் அறிவானந்தம் என்பவரை 2 ஆண்டுகளுக்கு முன்பு முதலை இழுத்துச் சென்று கொன்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.