க்னோ

த்திரப் பிரதேச முதல்வர் யோகியின் அரசு ரூ.90000 கோடி முதலீடு அளித்தாக கூறிய கொரிய நிறுவனம் பற்றிய உண்மைகளைப் பற்றி என் டி டி வி செய்தி வெளியிட்டுள்ளது

உத்திரப்ப் பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் முதலீட்டாளர் மாநாடு நடந்தது.   இந்த மாநாட்டின் மூலம் அரசுக்கு பெருமளவில் அன்னிய முதலீடுகள் வந்துள்ளதாக செய்திகள் வந்தன.   அதில் அதிகபட்சமாக ரூ. 90000 கோடியை ஒரு கொரிய நிறுவனம் அளிக்க உள்ளதாக அரசு தெரிவித்தது.   அந்த நிறுவனத்தின் பெயர் ஒர்ல்ட்பெஸ்டெக் எனவும் அந்த நிறுவனம் உத்திரப் பிரதேச மாநிலத்தில் மின்சாரம்,  உணவு பதப்படுத்துதல் மற்றும் குளிர் பதன பாதுகாப்பு ஆகிய துறைகளில் முதலீடு செய்ய உள்ளதாகவும் செய்திகள் வந்தன.

இந்த நிறுவனம் அதிகம் பேசப்படாத நிறுவனம் என்பதால் செய்தித் தொலைக்காட்சியான என் டி டி வி க்கு சிறிது சந்தேகம் வந்துள்ளது.   அதனால் அந்த டிவி நிறுவனம், அந்த நிறுவனத்தின் இணைய தளத்தை ஆய்வு நடத்தி உள்ளது.   அப்போது அந்த நிறுவனம் குளிரூட்டும் பணிகளை செய்து வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.   அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக ஹுண்டாய் மோட்டார் மற்றும் டேவூ மோட்டார் ஆகியோர் உள்ளனர்.   அந்த இணையதளத்தில் நிறுவனத்தின் நிதி நிலை பற்றி குறிப்பிடப்படவில்லை.

அதே நேரத்தில் கொரிய வர்த்த நிறுவனங்களின் விவரங்களை அளிக்கும் மற்றொரு இணைய தளத்தை என் டி டி வி ஆய்ந்துள்ளது.  அதில் இந்த நிறுவனம் கடந்த 2000ஆம் வருடத்தில் தொடங்கப்பட்டது எனவும் மொத்தம் சுமார் 50 பேர் பணிபுரியும் இந்நிறுவனத்தின் மொத்த வருமானம் அமெரிக்க டாலரில் 6.5 மில்லியனில் இருந்து 13 மில்லியன் என காணப்பட்டுள்ளது.   அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.6.5 லிருந்த் ரூ.13 கோடிகள் ஆகும்.

இந்த நிறுவனம் முதலீடு செய்வதாக அறிவிக்கப்பட்ட தொகையைப் போல 0.01% மட்டுமே இந்தக் கம்பெனியின் வருமானம் ஆகும்.   இதனால் மேலும் சந்தெகம் அடைந்த என் டி டி வி அந்த நிறுவனத்தை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றுள்ளது.    ஆனால் அங்கு யாரும் பதில் அளிக்கவில்லை.

இறுதியாக உத்திரப் பிரதேச அரசு அதிகாரிகள் அந்த நிறுவனத்துடன் எந்த ஒரு ஒப்பந்தமும் செய்துக் கொள்ளவில்லை என அறிவித்துள்ளது.   மேலும் மாநில தொழில் முன்னேற்ற அமைச்சர் சதீஷ் மகானா, “நாங்கள் அந்த குறிப்பிட்ட நிறுவனத்துடன் எந்த ஒரு ஒப்பந்தமும் செய்யவில்லை.   எங்களுக்கு ரூ.90000 கோடி முதலீட்டை எந்த ஒரு நிறுவனமும் அளிக்கவில்லை.   அதிக பட்ச தொகையாக ரூ.36000 கோடியை அதானி குழுமம் முதலீடாக ளைத்துள்ளது”  என என் டி டி வி யிடம் தெரிவித்துள்ளார்.