டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 7,240 பேர் பாதித்துள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணி வரையிலான கொரோனா பாதிப்பு குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, தினசரி பாதிப்பு, 40% ஆக  பதிவாகி உள்ளது. அதே வேளையில்,  நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது.

நேற்று ஒரே நாளில் புதிதாக மேலும் 7,240 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,31,97,522 ஆக உயர்ந்தது.

கடந்த 24மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி மேலும்  8 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம்  நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,24,723 ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் விகிதம் 1.21% ஆக குறைந்துள்ளது.

தொற்றில் இருந்து நேற்று ஒரே நாளில் 3,591 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,26,40,301 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.71% ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் 32,498 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.08% ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில்  நேற்று ஒரே நாளில் 15,43,748 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 1,94,59,81,691 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.