டெல்லி:  குடியரசு துணைத் தலைவர் தேர்தலையொட்டி,  தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் ஜெகதீப் தங்கர் பிரதமர் மோடி உள்பட பாஜக அமைச்சர்கள் முன்னிலையில், இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

துணை குடியரசு துணைத்தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 6-ம் தேதி நடக்க உள்ளது. இதில்,  பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக மேற்குவங்க ஆளுநராக இருக்கும் ஜெகதீப் தங்கர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் சார்பில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் மார்கரெட் ஆல்வா  வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில்,  தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் ஜெகதீப் தங்கர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.  பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த நிகழ்வின்போது, அவர்களுடன் உள்துறை அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கலந்துகொண்டனர்.