வேலாஜி, மகாராஷ்டிரா

டற்படை அதிகாரியைக் கடத்திச் சென்ற கும்பல் பணம் கிடைக்காததால் தீ வைத்து கொலை செய்துள்ளனர்.

கோயம்புத்தூரில் இந்தியக் கடற்படை பிரிவில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மிதிலேஷ் துபே என்பவர் அதிகாரியாகப் பணி புரிந்து வந்துள்ளார்.  இவர் தனது சொந்த ஊருக்குச் செல்ல கடந்த 31 ஆம் தேதி அன்று சென்னை விமான நிலையம் வந்துள்ளார்.   ஆனால் அவர் அன்று பயணம் செய்யாமல் மாயமாகி உள்ளார்.  இதனால் பெற்றோர் கவலை அடைந்தனர்.

காவல்துறையினரிடம் பெற்றோர் புகார் அளித்தனர்  இதையொட்டி காவல்துறை நடத்திய விசாரணையில் அதிகாரியை கடந்த 31 ஆம் தேதி 3 பேர் அட|ங்கிய கும்பல் ஒன்று துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது தெரிய வந்தது.   அவரை விடுவிக்க ரூ.10 லட்சம் கேட்டுள்ளனர்.   ஆனால் காவல்துறையின் அறிவுறுத்தலின் பேரில் பணம் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மிதிலேஷ் துபே கார் மூலம் மகாராஷ்டிரா மாநிலத்தில் குஜராத் எல்லையில் உள்ள காட்டுப்பகுதியில் உள்ள வேலாஜி என்னும் சிற்றூருக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.  அவரை மீட்க  பணம் கிடைக்காததால் அவர் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  இச்சம்பவம் கடும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.