சென்னை

தேசிய சித்த மருத்துவ நிறுவனம் கொரோனா நல மையங்களை தங்கள் பொறுப்பில் விடுமாறு  தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அகில இந்திய அளவில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

கொரோனாவுக்கு சரியான சிகிச்சை முறை மற்றும் தடுப்பூசி இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை.

இந்நிலையில் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் தமிழக அரசுக்குக் கோரிக்கை ஒன்றை அளித்துள்ளது.

அதில் கொரோனா நல மையங்களை தங்கள் பொறுப்பில் விடுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

அத்துடன் கொரோனா உறுதியான நோயாளிகளை மூன்றே தினங்களில் முழு குணம் பெற வைக்க முடியும் என அரசுக்கு உறுதி அளித்துள்ளது.

– பிடிஐ